பாரிய இராணுமுகாம்! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் கிழக்கில்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புன்னக்குடா தளவாய் கிராமசேவையாளர் பிரிவில் மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் 50 ஏக்கர் காணி வழங்கப்பட்டு புதிய இராணுவ முகாம் அமைப்பதற்காண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ முகாம் அமைக்கும் பணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதன் பிரகாரம் புன்னக்குடா கடல் பகுதியுடன் இணைந்த இராணுவ முகாம் ஒன்று புன்னக்குடா தளவாய் பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

குறித்த இராணுவ முகாம் அமைக்கப்படுவதை ஏறாவூர் முஸ்லீம் மக்கள் கடுமையாக எதிர்த்திருந்ததுடன் முஸ்லீம் அரசியல்வாதிகளும் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்திருந்தனர்.

இருந்தும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகல்லாகம அவர்களின் நிர்ப்பந்தத்தில் குறித்த இராணுவமுகாம் அமைப்பதற்கான காணி மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டு இராணுவ முகாம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.