தீர்வு தராது தமிழர்களை ஏமாற்ற முடியாது அரசு!
தீர்வு கொண்டு வரப்படாவிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிப் பெரும்பான்மையினர் சிந்திக்க வேண்டும். பன்னாட்டுச் சமூகம் எமக்குச் சில உறுதிமொழிகளைத் தந்துள்ளது. இந்த விடயத்தில் பன்னாடுகள் ஏதோ ஒன்றைச் செய்தே ஆக வேண்டும். எம்மிடம் இராஜதந்திரம் உண்டு. இத்தனை காலம் பொறுமையாக இருந்த நாம் இன்னமும் சற்றுப் பொறுமை காக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
தீவகம், குறிகாட்டுவானில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வ மதப் பொங்கல் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-:
முடியும், முடியாது – வரும், வராது என்று தற்போது ஒரு விடயம் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது. நாம் நல்லதையே எதிர்பார்க்கின்றோம். எம்மை விமர்சிப்பவர்கள் நடக்க முடியாதவற்றைக் கூறுகின்றனர்.
பெரும்பான்மையினர் எமக்கு ஒரு தீர்வை வழங்கத் தவறுவார்களானால், தமிழர்களுக்கான உரிமையை வழங்க மறுத்தால் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பன்னாட்டுச் சமூகம் எமக்குச் சில உறுதிமொழிகளைத் தந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சரியான பாதையில்தான் செல்கின்றது. எம்மிடம் இராஜதந்திரம் உண்டு. நேரம் வரும்போதே சிலவற்றைச் செய்ய முடியும்.
புதிய அரசமைப்புக்கு மகாநாயக்கர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் நாள்களில் பல சிக்கல்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியும் அரசமைப்பு முயற்சிகளில் இருந்து பின்வாங்குகின்றது போன்று தென்படுகின்றது. எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி புதிய அரசமைப்பு நாடாளுமன்றத்துக்கு வருமா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.
என்னால் இயன்றவற்றை இந்தப் பிரதேசத்துக்குச் செய்வேன்.
கடந்த ஆண்டு எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 10 இலட்சம் ரூபாவைத் தீவகத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு ஒதுக்கினேன். ஆனால் அரசியல் குழப்பங்களால் அவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரியாது போய்விட்டது. திட்டமிடல் அமைச்சிடம் கதைக்கவுள்ளேன். அந்த நிதி மீளக் கிடைத்தால் தருவேன். 2019ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் நான் ஒரு மில்லியன் ரூபாவை ஒதுக்குவேன். திட்டங்களை நீங்கள் தயாரித்துத் தாருங்கள். அந்தத் திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிதியை ஒதுக்குகின்றேன்.
நாம் அபிவிருத்தியில் பின்தங்கி நிற்கின்றோம். அபிவிருத்திக்கு எனப்பணம் வந்தது. ஆனால் அபிவிருத்தி செய்யப்படவில்லை. முன்னாள் ஆட்சியாளர்கள் எங்கு அபிவிருத்தியை மேற்கொண்டார்கள் என்று தெரியவில்லை. திட்டங்களை சரியாக வகுத்து அபிவிருத்தியில் இறங்குவோம். அதற்கு நான் பக்கபலமாக நிற்பேன் என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
தீவகம், குறிகாட்டுவானில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வ மதப் பொங்கல் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-:
முடியும், முடியாது – வரும், வராது என்று தற்போது ஒரு விடயம் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது. நாம் நல்லதையே எதிர்பார்க்கின்றோம். எம்மை விமர்சிப்பவர்கள் நடக்க முடியாதவற்றைக் கூறுகின்றனர்.
பெரும்பான்மையினர் எமக்கு ஒரு தீர்வை வழங்கத் தவறுவார்களானால், தமிழர்களுக்கான உரிமையை வழங்க மறுத்தால் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பன்னாட்டுச் சமூகம் எமக்குச் சில உறுதிமொழிகளைத் தந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சரியான பாதையில்தான் செல்கின்றது. எம்மிடம் இராஜதந்திரம் உண்டு. நேரம் வரும்போதே சிலவற்றைச் செய்ய முடியும்.
புதிய அரசமைப்புக்கு மகாநாயக்கர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் நாள்களில் பல சிக்கல்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியும் அரசமைப்பு முயற்சிகளில் இருந்து பின்வாங்குகின்றது போன்று தென்படுகின்றது. எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி புதிய அரசமைப்பு நாடாளுமன்றத்துக்கு வருமா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.
என்னால் இயன்றவற்றை இந்தப் பிரதேசத்துக்குச் செய்வேன்.
கடந்த ஆண்டு எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 10 இலட்சம் ரூபாவைத் தீவகத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு ஒதுக்கினேன். ஆனால் அரசியல் குழப்பங்களால் அவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரியாது போய்விட்டது. திட்டமிடல் அமைச்சிடம் கதைக்கவுள்ளேன். அந்த நிதி மீளக் கிடைத்தால் தருவேன். 2019ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் நான் ஒரு மில்லியன் ரூபாவை ஒதுக்குவேன். திட்டங்களை நீங்கள் தயாரித்துத் தாருங்கள். அந்தத் திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிதியை ஒதுக்குகின்றேன்.
நாம் அபிவிருத்தியில் பின்தங்கி நிற்கின்றோம். அபிவிருத்திக்கு எனப்பணம் வந்தது. ஆனால் அபிவிருத்தி செய்யப்படவில்லை. முன்னாள் ஆட்சியாளர்கள் எங்கு அபிவிருத்தியை மேற்கொண்டார்கள் என்று தெரியவில்லை. திட்டங்களை சரியாக வகுத்து அபிவிருத்தியில் இறங்குவோம். அதற்கு நான் பக்கபலமாக நிற்பேன் என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை