தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் உத்தியோகபூர்வ தொடர்புகள் இல்லை

உதயசூரியன் சின்னம் தேவைப்பட்டதன் அடிப்படையில் நாம் அதனைப் பெற்றிருந்தோம். எனினும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் உத்தியோகபூர்வமான தொடர்புகள் ஏதும் இல்லையென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.



வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் உடன்படிக்கையொன்றை செய்திருந்தோம். அதன் அடிப்படையிலேயே எமது செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம்.

மேலும், தேர்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு உதயசூரியன் சின்னம் தேவைப்பட்டதனாலேயே நாம் அதனைப் பெற்றிருந்தோம். ஆனால் தற்போது, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் உத்தியோகபூர்வமான விடயங்கள் ஏதும் இல்லை.

ஆகவே, எதிர்காலத்தில் இக்கட்சியுடனான தொடர்பு எவ்வாறு இருக்கப் போகின்றதென்பதை பொறுத்தே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.