சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பெண் திடீர் மரணம்

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பெண்ணொருவர் திடீரென வழியிலே உயிரிழந்துள்ளதாக நல்லதன்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பொல்கஸ் ஒவிட்ட பகுதியை சேர்ந்த கே.ஜே.சந்ராவதி என்ற (46 வயது) இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சிவனொளிபாதமலையின் அடிவாரத்திலிருந்து தனது யாத்திரையை மேற்கொண்ட குறித்த பெண், வழியில் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் நல்லதன்னி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.