மூடப்பட்ட சுதந்திரக் கட்சி அலுவலகம் -நாளை திறக்கப்படும்
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவை அடுத்து, மூடப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம், நாளை மீண்டும் திறக்கப் படும் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
‘அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைவாக கடந்த 26ஆம் திகதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது. தாம் தாய்லாந்தில் இருந்து திரும்பும் வரை, கட்சித் தலைமையகத்தை மூடுமாறும் அவர் உத்தரவிட்டிருந்தார். அரச தலைவர் நாடு திரும்பியுள்ள நிலையில், கட்சியின் தலைமையகம் நாளை மீண்டும் திறக்கப்படும்.’ என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சுதந்திரக் கட்சி தலைமையகத்தின் சாவிகள், மருதானை பொலிஸ் நிலையத்தில் கடந்த 26ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இந்தச் சாவிகள் மறுநாள் பிற்பகல் 3.15 மணியளவில், சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளால் பொறுப்பேற்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்தச் சாவிகள் மறுநாள் பிற்பகல் 3.15 மணியளவில், சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளால் பொறுப்பேற்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை