தமிழீழத்துக்கான பயணத்தை விடவில்லை கூட்டமைப்பு
தமிழீழத்தை உருவாக்கும் பயணத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை கைவிடவில்லை. அதனாலேயே மகிந்த ராஜபக்சவின் எதிர்கட்சிப் பதவியையும் சவாலுக்குட்படுத்துகின்றது.
இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது:
அவர் தெரிவித்ததாவது:
முன்னான அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதே எமது கட்சியின் இறுதித் தீர்மானமாக இருந்தது. சபாநாயகரும் அதை ஏற்றுக்கொண்டு செயற்படுகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் நகர்வுகளின் இலக்கு மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும், எதிர்க் கட்சித் தலைவராகவும், தலைமை அமைச்சராகவும் தொடர்வதைத் தடுப்பதே. மகிந்த ராஜபக்ச மக்கள் மத்தியில் எழுச்சியடைவதை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைப் பெற்றுத் தடுக்க முயற்சிக்கின்றனர்.
இவற்றின் பின்புலம் பிரிவினைவாதம் அல்லது தமிழீழத்தை அமைக்கும் பயணத்தைத் தமிழ்க் கூட்டமைப்புக் கைவிடவில்லை என்பதே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 16 பேரே நாடாளுமன்றில் உள்ளனர். ஆனால் எதிர்கட்சித் தலைவர் பதவியைக் கோருகின்றனர். யார் எமது தலைவர் என்று நாம் தீர்மானிப்பதைச் சவாலுக்குட்படுத்த அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.- என்றார்.
கருத்துகள் இல்லை