ரொறன்ரோவிற்கு கடும் குளிர் எச்சரிக்கை!


ரொறன்ரோவில் இவ்வார இறுதியில் கடும் குளிரான காலநிலை காணப்படும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, அநாவசிய வெளிப்பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை பகல் வேளைகளில் 2 பாகை செல்சியசாக காணப்படும் வெப்பநிலை, இரவு நேரங்களில் -13 செல்சியசாகக் குறைந்து காணப்படும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை மேலும் மோசமடைந்து -21 செல்சியசாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுமார் 20 கிலோமீற்றர் வேகத்தில் -22 செல்சியசில் குளிர் காற்று வீசும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.