வடமேற்கு அல்பேர்ட்டாவில் எரிவாயு தளத்தில் வெடிப்பு: மூவர் காயம்
வடமேற்கு அல்பேர்ட்டாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்துறை தளத்திலுள்ள கட்டிடமொன்றில் ஏற்பட்ட வெடிப்பில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
(வெள்ளிக்கிழமை) இந்த வெடிப்பு சம்பவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் உள்ளூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு எவ்வித உயிராபத்தும் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், வெடிப்பு குறித்து ஆராய்வதற்காக விசாரணை குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை