புதிய அரசமைப்பை நடைமுறைப்படுத்தவேண்டும்! ராதாகிருஷ்ணன் கோரிக்கை!

சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை புதிய அரசு தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் அரசமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே முடியும்.
இனவாத  கண்கொண்டு அரசமைப்பைக் குழப்பும் ஒரு குழுவினரும் எம்மத்தியில் உள்ளனர். இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், சிறப்புப் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்ற வரவேற்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்்.

புதிய உத்தேச அரசமைப்புத் திட்டம் நாடாளுமன்றத்துக்கு அண்மையில் சமர்பிக்கப்பட்டது. இந்த உத்தேச அரசமைப்புத் திட்டமானது சிறுபான்மை மக்களுடைய நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தேச அரசமைப்புத் திட்டத்தை இனவாத கண் கொண்டு பார்க்கின்ற ஒரு குழுவினர் எம்மத்தியில் இருக்கின்றார்கள்.
அவர்கள் என்றுமே இனவாதத்தை மாத்திரம் கையில் வைத்துக்கொண்டு அரசமைப்பு திட்டத்தை இல்லாது செய்வதற்கு தங்களுடைய செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.ஆனால் இதனை சிறுபான்மைக் கட்சிகள் என்ற வகையில் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் மேலும் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.