பளையில் கைது! ஆயுதங்களும் மீட்பு!
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரந்தாய் பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டார். வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத தடுப்புப் பரிவினர் அவரைக் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர் முன்னாள் போராளி என்று தெரிவிக்கப்பட்டது.அவரிடம் இருந்து பிஸ்ரல் 2, இடியன் 2,சொட்கண் துவக்கு 1 , கட்டுத்துவக்கின் இரண்டு குழாய்கள், ரி56 ரகத் துப்பாக்கிக்குப் பாவிக்கும் 126 தோட்டாக்கள், வாள்கள் 2 போன்ற ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நபர் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முற்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள என்று ன பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை