125 புறாக்கள் பங்கு கொண்ட பந்தையப் போட்டி!

யாழ்ப்பாணப் புறாபோட்டியாளர் சங்கம் சார்பில் நீண்ட தூரம் பறக்கும் புறாக்களுக்கான பந்தயப் போட்டி ஒன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் என்.ராயூ தலைமையில் இன்று காலை 7.30 மணிக்கு பந்தயத்தில் பங்கு பெறும் புறாக்கள் மணலாற்றிலிருந்து பறக்க விடப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் வீடுகளில் புறா வளர்ப்பாளர்கள் இணைந்து யாழ் புறாக்கள் போட்டியாளர் சங்கத்தை உருவாக்கி அதன் சார்பில் 125 ‘கோமர்’ என்ற வகை பந்தயப் புறாக்களை போட்டிக்காக பறக்கவிட்டுள்ளனர். மணலாறு தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான வான்வெளி தூரமாக 115 கிலோமீற்றர்கள் கணிக்கப்பட்டு அத்தூரத்தை பந்தயத்தில் கடந்து வெற்றிபெறும் புறாக்களில் முதல் மூன்று புறாக்களின் உரிமையாளர்களுக்கு முறையே 25 ஆயிரம், 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் ரூபாக்கள் பணப்பரிசாகவும் வழங்கப்படவுள்ளது. அத்துடன் வெற்றி பெறும் முதல் 15 புறாக்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கப்படும் என யாழ் புறாக்கள் போட்டியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.