ஜனாதிபதி வடக்கு பாடசாலைகளின் தேவைகளை மாணவர்களிடம் கேட்டறிந்தாரா?

கிளிநொச்சியில் மர நடுகை நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாடசாலைகளின் தேவைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.


கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை நிழ்வில் ஜனாதிபதி இன்று (திங்கட்கிழமை) கலந்துக் கொண்டார்.

ஜனாதிபதியுடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, மரக் கன்றுகளை நாட்டி வைத்தனர்.

இதன்போது ஆயிரத்து 500 மரக்கன்றுகள் குறித்த வளாகத்தில் நாட்டி வைக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வின்போது ஜனாதிபதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடன் சகஜமாகக் கலந்துரையாடியதுடன், பாடசாலைகளின் தேவைகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.