ஊடகவியலாளர் போத்தல கடத்தல்: பிரதி பொலிஸ்மா அதிபரிடம் வாக்குமூலம்

ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டு, தாக்கப்பட்டமை தொடர்பாக வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தென்னகோனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இவ்விவகாரம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

போத்தல கடத்தல் விவகாரத்துடன் தொடர்பில்லாத இருவர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அப்பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடந்த 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் போத்தல முன்வைத்த முறைபாட்டுக்கு அமைய, குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தென்னகோன், நுகேகொடை பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.