வலிகாமம் தெற்கில் நடைபாதை வியாபாரம் அகற்றப்பட்டது!


வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சட்டத்திற்கு புறம்பான வகையிலும் இருந்த நடைபாதை வியாபாரம் அகற்றப்பட்டுள்ளது. உடுவில் உப அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் நடைபாதை வியாபாரம் இன்று (திங்கட்கிழமை) இவ்வாறு அகற்றப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வலி.தெற்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உடுவில் உப அலுவலக பொறுப்பதிகாரி தலைமையிலும் வருமானவரி பரிசோதகர்கள் மற்றும் சுன்னாகம் பொலிஸார் இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்தனர். நடைபாதை வியாபாரங்களால் போக்குவரத்துக்கு இடையூறு மாத்திரமன்றி, விபத்துக்கள் ஏற்படவும் காரணமாக அமைந்ததென கடந்த காலங்களில் முறைப்பாடு செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, எதிர்வரும் காலங்களில் போக்குவரத்துக்கு இடையூறான காணப்படும் நடைபாதை வியாபாரங்கள் தொடர்ச்சியாக அகற்றப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.