தமிழர்களின் கலாசாரத்தை திட்டமிட்டு சிதைக்கின்றனர்


யுத்தத்திற்கு பின்னர் தமிழர்களின் கலாசாரம், இனம் மற்றும் பாரம்பரியம் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முல்லைத்தீவில் பிரபலமான பிள்ளையார் கோயிலொன்று காணப்படுகின்றது. அதற்கு அண்மையில் தற்பொழுது புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கல் தினத்தன்று கோயிலில் பூஜைகள் நடைபெற்றபோது பௌத்த மதகுரு ஒருவர் அதை தடுக்க முற்பட்டார். தமிழர்களின் இருப்புக்களை அழிக்கும் வகையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் சிங்களவர்களினால் திட்டமிட்டு முன்னெடுக்கபடுகின்றன. இவ்வாறான நிலையில் நாம் விழிப்பாகவிருக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.