வவுனியாவில் புகைப் படக்கலைஞர்களுக்கு செயலமர்வு!!

வட கிழக்கு மாவட்டங்களிலுள்ள புகைப்படக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கான செயலமர்வு, வவுனியா ஓவியா விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்றது.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வவுனியா மாவட்ட இயக்குனர் பொன் சி.சுபாஷ்சிங்கம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை மற்றும் உலகப் புகழ்பெற்ற படப்பிடிப்பாளர்களான செல்வரத்தினம் நிமால் மற்றும் அனுஷ்க ஏரங்க ஆகியோர் புகைப்படப்பிடிப்பாளர்களுக்கான வழிகாட்டல்களையும், விரிவுரைகளையும் வழங்கியிருந்தனர்.

வடகிழக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் செயலமர்வு இடம்பெற்றது.

நிகழ்வில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன், வர்த்தக சங்கத்தின் தலைவர் ச.சுஜன், செயலாளர் ஆ.அம்பிகைபாகன், தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன் , தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் தலைவர் சாரங்கன் சர்மா, வடக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சங்கத்தின் செயலாளர் மயூரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.