கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் புதர் தீ மலர்கள்!

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படுவதை உணர்த்தும் சிவப்பு வண்ண புதர் தீ மலர்கள் பூத்துக்குலுங்குகிறது. காட்டுத்தீ ஏற்படும் என்பதை இந்தப் பூக்கள் முன்னெச்சரிக்கையாக உணர்த்துகின்றன.


கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீ போன்ற சிவப்பு நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இந்த மலர்கள் பொதுவாக குளிர் காலம் முடிந்து கோடைக் காலம் துவங்கும் போது அதிக அளவில் மலரும். கொடைக்கானலில் குளிர் காலங்களான டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அதிக அளவிலான பனிப் பொழிவினால் புதர்கள் கருகும்.

இதைத் தொடர்ந்து கோடைக் காலம் துவங்கும் போது கருகிய புதர்களில் அடிக்கும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக எளிதில் தீப்பற்றி எரியும். நடப்பாண்டில் கொடைக்கானல் உள்பட அனைத்து மலைப் பிரதேசங்களிலும் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் ஜீரோ டிகிரிக்கு வானிலை சென்றது. கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் விரைவில் புற்கள் காய்ந்து காணப்படுகின்றன.

எனவே, நடப்பாண்டில் அதிகளவில் வெயில் இருக்கும் என்பதையும், கோடைக்கு முன்பே இந்தப் புற்கள் தீப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதைத்தான் இந்த சிவப்பு தீ மலர்களும் உணர்த்துகின்றன.

தீப்பிடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதை இந்தப் பூக்கள் உணர்த்துகின்றன என்று தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மலைப் பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் பூத்து குலுங்கும் இந்த மலர்களைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.