குழியினுள் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
புத்தளம் பிரதேச சபையின் உப தலைவர் ஜெயம்பதி பத்திராஜா முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரங்குளி செம்பட்ட வேலாசிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீதியில் வெட்டப்பட்டிருந்த பாரிய குழியொன்றுக்குள் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே, இவர் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீதியில் அபிவிருத்திப் பணிக்காக பாலம் ஒன்றுக்கு வெட்டப்பட்டிருந்த குழிக்குள், மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது விழுந்து படுகாயமடைந்த நபர், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளி- சுகந்தகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான (32 வயது) வர்ணகுலசூரிய நிலந்த பெர்ணான்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, புத்தளம் பிரதேச சபையின் உப தலைவரே குறித்த வீதி புனரமைப்பு பணிகளை முன்னெடுத்து வந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற இடத்தில் எந்தவித அறிவித்தல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதோடு, இச்சம்பவம் இடம்பெற்ற பின்னரே அறிவித்தல் பதாதைகள் இடப்பட்டு பாதை மூடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
மதுரங்குளி செம்பட்ட வேலாசிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீதியில் வெட்டப்பட்டிருந்த பாரிய குழியொன்றுக்குள் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே, இவர் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீதியில் அபிவிருத்திப் பணிக்காக பாலம் ஒன்றுக்கு வெட்டப்பட்டிருந்த குழிக்குள், மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது விழுந்து படுகாயமடைந்த நபர், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளி- சுகந்தகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான (32 வயது) வர்ணகுலசூரிய நிலந்த பெர்ணான்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, புத்தளம் பிரதேச சபையின் உப தலைவரே குறித்த வீதி புனரமைப்பு பணிகளை முன்னெடுத்து வந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற இடத்தில் எந்தவித அறிவித்தல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதோடு, இச்சம்பவம் இடம்பெற்ற பின்னரே அறிவித்தல் பதாதைகள் இடப்பட்டு பாதை மூடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை