அனுமதியின்றி மணல் ஏற்றிய சாரதிகளுக்கு தண்டம்!!

அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய மூன்று வாகனங்களின் சாரதிகளுக்கு சாவகச்சேரி நீதிமன்றில் தண்டம் விதிக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட மணலைப் பறிமுதல் செய்யமாறும் சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸாரால் அனுமதிப் பத்திரமின்றி வாகனங்களில் மணல் ஏற்றியமை தொடர்பாக மூன்று சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றில் தனித்தனி வழக்குத் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகுள் இன்று தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சாரதிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து ஒருவருக்கு 75 ஆயிரம் ரூபாவும் ஏனைய இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாவும் தண்டமாக விதிக்கப்பட்டது.

அத்துடன் கைப்பற்றப்பட்ட மணலைப் பறிமுதல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.