இராணுவம் காணிகளை சுருட்டியது !!
காணி விடுவிப்பு என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள்.
இவ்வாறு தையிட்டி வடக்கில் நேற்று விடுவிக்கப் பட்ட காணியின் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
தையிட்டி வடக்கு மற்றும் தையிட்டி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 19.64 ஏக்கர் காணி நேற்று விடுவிக்கப் பட்டது.
விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது காணிகளைச் சென்று பார்வையிட்டனர். காணி உரிமையாளர் ஒருவர், தனது 14 பரப்புக் காணியில் 2 பரப்பை மாத்திரம் இராணுவத்தினர் விடுவித் துள்ளதாகத் தெரிவித்தார்.
எஞ்சிய 12 பரப்பையும் முள்ளுக்கம்பி வேலியால் மறித்து அடைத்துள்ளனர் என்று குற்றம் சுமத்தினார்.
12 பரப்புக் காணிக்குள்ளேயே தனது வீடு, கிணறு எல்லாம் உள்ளடங்குகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை