கிளிநொச்சி இன்று வழமைக்கு மாறான காலநிலையில் !

கிளிநொச்சியில் வழமைக்கு மாறாக அதிக பனி மூட்டம் நிலவுவதாகவும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 07.30 மணி வரைக்கும் மிகவும் கடுமையான பனி மூட்டம் நிலவியதால் பாடசாலைக்கு செல்வதற்கு மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

சுமார் நூறு மீற்றர் தூரத்திற்குள் பயணிப்பவர்கள் எவரும் தெரியாத அளவுக்கு நிலைமைகள் காணப்பட்டதுடன், இதன்காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும், வாகன சாரதிகளும் பெரும் பாதிப்புக்குள்ளானதாகவும் தெரியவருகின்றது.

நாட்டில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை வேளைகளில் குளிரான காலநிலை நிலவுவதோடு, கடும் பனி மூட்டம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.