மார்ச்சில் தாய்லாந்து பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு!

தாய்லாந்து பொதுத்தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் தாய்லாந்தில் மீண்டும் மக்களாட்சி மலர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசியல் விமர்சகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் தாய்லாந்து மன்னர் நாட்டின் முதல் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு அரசாணையைப் பிறப்பித்தார்.

இந்தநிலையிலேயே எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களும் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.

எனினும் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே நடைபெறவுள்ளமையினால் தேர்தல் நடவடிக்கைகள் அதற்கு இடையூறாக அமையலாம் என எதிர்வு கூறப்பட்டிருந்தது.

இதேவேளை, தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழா மே மாதம் 4ஆம் திகதியிலிருந்து ஆறாம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.