கண்ணடித்தமையால் வீட்டுச் சிறையில் அடைபட்டேன்: பிரியா வாரியர்!!

‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடலொன்றில் நான் கண்ணடித்த காட்சி இணையத்தில் வைரலாகியமையால் வீட்டுச் சிறையில் அடைபட்டேன் என நடிகை பிரியா வாரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அடார் லவ்’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஐதராபாத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரியா வாரியர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,  ”ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடலொன்றில் நான் கண்ணடித்த காட்சி ஒரு நிகழ்வாகும்.

ஆனால் அக்காட்சி இணையத்தில் வைரலாகிய ஒரே நாளில் புகழ் பெற்றமையால் என்ன நடக்கிறதென தெரியாமல் என்னுடைய பெற்றோர் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து விட்டனர்.

அப்போது அதிகளவான ஊடகவியளார்கள் என்னை சந்திப்பதற்காக வருகை தந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வார்கள். இதனால் சில ஊடகவியலாளர்கள் கல்லூரியிக்கு வந்து என்னிடம் நேர்காணலில் ஈடுபட்டு சென்றனர்.

உண்மையாகவே மக்கள் கூட்டத்தை பார்த்த பின்னரே அக்கண்ணடிப்பு காட்சியின் தாக்கத்தை புரிந்துகொண்டேன்’ என பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.