மெரினாவில் பொலிஸார் குவிப்பும் குடியரசு தின விழாவும் !!

சென்னையில் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரை, காமராஜர் சாலை ஆகிய இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடியரசு தின விழா இந்தியா முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதன்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும்  இடம்பெறாமல் தடுக்கும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகவே அதிகளவான பொலிஸாரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட பொலிஸாருக்கும்  அரசு அறிக்கை அனுப்பியுள்ளது.

அந்தவகையில் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்களில் அதிகளவான பொலிஸார் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

லஷ்கர், தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.