ஸ்தம்பித்தது மட்டுநகா்!! முழுமையான கடையடைப்பு!

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் இன்று முழுக்கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் உணர்வாளர் அமைப்பினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், தமிழ் பிரதேசங்களிலுள்ள வர்த்தக சங்கங்கள், தனியார் போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. அரச தனியார் வங்கிகள் இயங்கவில்லை. சில அரச திணைக்களங்கள் திறக்கப்பட்டிருந்தன. வர்த்தக் நிலையங்கள், சந்தை போன்ற பூட்டப்பட்டனுடன், வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.