ஜெயலலிதாவின் மரணத்துக்கும் கோடநாடு சம்பவங்களுக்கும் தொடர்புள்ளது: கனிமொழி!!

தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கும் கோடநாடு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறதென மாநில மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி  தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே கோடநாட்டில் காணப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் ஆகியவற்றை  திருடுவதற்கு முயற்சி நடைபெற்றன.

இந்நிலையில் கோடநாட்டில் இடம்பெற்ற தொடர்ச்சியான 5 கொலைகள் மற்றும்  திருட்டுகளை அவதானிக்கும்போது, ஜெயலலிதாவின் மரணத்துக்கும் இதில் தொடர்பு இருக்குமென சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இச்சம்பவங்களில் காணப்படும் உண்மைகள், மக்களிடம் சென்றடைய கூடாதென்ற நோக்கிலேயே அ.தி.மு.க. அரசு அனைத்து ஊடகங்களையும் அச்சுறுத்தி வருகின்றது.

இருப்பிளும் கோடநாடு விவகாரம் மற்றும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பிலான உண்மையை கண்டறிந்து, மக்களிடம் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகின்றோம்” என கனிமொழி தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.