ட்ரம்ப் திடீா் முடிவு! நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன்!

அரசுத்துறை முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்றப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் நாடாளுமன்றத்தில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளின் உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம்.

பிரதிநிதிகள் சபையின் தலைவர் விடுக்கும் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உரையை நிகழ்த்துவார். வரவு செலவுத்திட்ட செய்தி, நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஜனாதிபதியின் உரையில் இடம் பெறும்.

அந்த வகையில், எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்ற வருமாறு ஜனாதிபதி ட்ரம்பிற்கு பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி அழைப்பு விடுத்தார். எனினும் அவர் அடுத்த நாளே தனது அழைப்பை மீளப்பெற்றுக்கொண்டார்.

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால் அமெரிக்காவின் பல்வேறு அரசுத்துறைகள் 4 வாரங்களுக்கும் மேலாக முடங்கி இருப்பதால், முதலில் அதற்கு தீர்வுகாண வேண்டும் எனவும், பின்னர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ளும் விதமாக, அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,

“அரசுத்துறைகள் முடக்கம் நீடிக்கும் வேளையில், நாடாளுமன்றத்தில் உரையாற்ற நான்சி பெலோசி என்னை அழைத்தார். நான் அதனை ஏற்றுக்கொண்டேன்.

ஆனால் பின்னர் அவர் முடிவை மாற்றிக்கொண்டார். நாடாளுமன்ற உரைக்கு தாமதமான ஒரு திகதியை அவர் பரிந்துரைக்கிறார். அரசுத்துறைகள் முடக்கம் எப்போது முடிவுக்கு வருகிறதோ, அப்போதுதான் நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவேன்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.