தென்மராட்சியில் கர்ப்பிணியின் மீது மண்வெட்டி பிடியினால் தாக்குதல்

யாழ்.சாவகச்சேரியில், நிறைமாதக் கர்ப்பிணியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.சாவகச்சேரி கெற்போலி பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் வீதியால் சென்றுக்கொண்டிருந்தபோது, வீதியில் வழிமறித்த முன்னாள் காதலன் மண்வெட்டி பிடியினால் அவரது வயிற்றில் பலமாக தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பெண் கதறியதையடுத்து வீதியால் சென்றவர்கள் அப்பெண்ணை மீட்டு நோயாளர் காவு வண்டியின் (அம்புலன்ஸ்) மூலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸ் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கான பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.