ஏழு பேரின் விடுதலையை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம்!- அற்புதம்மாள் கோரிக்கை!!



























அரசியல் நோக்கத்திற்காக 7 பேரின் விடுதலை விவகாரத்தை பயன்படுத்த வேண்டாமென பேரரிவாளனின் தாயரார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழங்கில் கைதாகியுள்ள 7 பேரின் விடுதலை தொடர்பில், பல்வேறு தரப்பினரையும் சந்திப்பதற்காக அற்புதம்மாள் கோவை சென்றிருந்தார்.

இதன்போது ஊடகவியலாளர்களை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“தண்டனை காலம் முடிந்தும் குறித்த 7 பேரையும் சிறையில் வைத்திருப்பது நியாயமில்லை.

மேலும் விடுதலை குறித்த அமைச்சரவையின் அறிக்கையில் ஆளுநர் கையெழுத்திடும் வரை தமிழகம் முழுவதும் அவர்களது விடுதலைக்காக பயணம் மேற்கொள்ளவுள்ளேன்

அத்துடன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்காமல் தேர்தலுக்காக இவர்களது விடுதலையினை காலம் கடத்துவார்களாயின் தமிழகத்தில் இழிவான அரசியல் நடைபெறுகிறதென்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன்” என அற்புதம்மாள் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.