வவுனியாவில் விடுதலைப்புலிகளின் நடமாட்டமாம்?

வவுனியாவில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் காணப்படுவதாக கூறி பாதுகாப்பு படையினர் பலத்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


வவுனியா, குஞ்சிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம், திடீரென 3 சந்தேகநபர்கள் விடுதலை புலிகளின் சீருடையுடன் வந்து உணவு கேட்டதாகவும் வீட்டிலுள்ளவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தமையால் பலாத்காரமாக உணவினை எடுத்து உட்கொண்டுவிட்டு  அவ்வீட்டின்  கிணற்றில் நீராடி சென்றுள்ளனா் என்ற தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனால், நேற்று முதல் (வெள்ளிக்கிழமை) வவுனியா முழுவதிலும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தினால் வவுனியா முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

இந்நிலையில் குறித்த தகவல், சமூகவிரோதிகளால் திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கலாமென அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.