கேப்பாப்பிலவில் பொலிஸார் குவிப்பு

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு கேப்பாப்பிலவு மக்கள் இன்று பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.


கேப்பாப்பிலவு பிரதான வாயிலில் தமது போராட்டத்தை ஆரம்பித்து கேப்பாப்புலவு இராணுவ முகாம் வரை ஊர்வலமாகச் சென்று, இராணு முகாமின் வாயிலின் முன்பாகவும் தமது போரட்டத்தை முன்னெடுத்தனர்.
முன்னெடுத்தனர்.

கேப்பாப்பிலவு போராட்டத்துக்குத் தலைமை தாங்குபவர்கள் என இரு பெண்களுக்கெதிராக, நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் ஜனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுக்க அனுமதி வழங்கியிருந்து.

இந்த நிலையில் மக்கள் ஜனநாயக வழயில் தமது நில மீட்பைக் கோரி இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனால் போராட்ட இடத்தில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் இராணுவ முகாம் வாயில், பாதுகாப்பு வரியல் இட்டு பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுமிருந்தனர்.

அதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ முகாமுக்கு எதிராக, வீதியின் மறுபுறம் மதிய உணவு சமைப்பதற்கு முற்பட்ட வேளை, பொலிஸார் தடுத்தனர். அதனால் ஆர்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.