யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முப்படையினரின் குடும்பத்தினருக்கு ஆயுட்கால உதவி!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முப்படையினரின் குடும்பத்தினருக்கு ஆயுள் முழுவதும் உதவிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்று(சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இதற்கமைய யுத்தத்தினால் ஊனமுற்ற, உயிரிழந்த முப்படையினரின் மனைவி மற்றும் தங்கிவாழ்வோருக்கே இவ்வாறு உதவிகள் வழங்கப்படவுள்ளன.

யுத்தத்தின் போது ஊனமுற்ற தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என ஊனமுற்ற முன்னாள் இராணுவத்தினர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையிலேயே, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.