கஞ்சாப் பொதியுடன் சிக்கிய இருவர்!!

கஞ்சாப் பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் மன்னார் பிரதான பாலத்தில் வைத்து கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

-கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, மன்னார் பிரதான பாலத்தில் வைத்து ஹயஸ் ரக வாகனத்தை சோதனையிட்ட போது சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சாப்பொதி மீட்கப்பட்டது.

குறித்த வாகனத்தில் பயணித்த உடுகம மற்றும் ஜாஏல பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 47 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 2 இலட்சம் ரூபா பெறுமதியானது எனத் தெரிய வருகின்றது.

இருவரும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.