தலிபான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அமெரிக்கா!!

ஆப்கானிஸ்தானின் தொடரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் தலிபான்களும் அமெரிக்காவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நீடிக்கும் 17 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினால் ஸல்மாய் கலிஸாத் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கட்டாரில் 6 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்திய அவர், தமது டுவிட்டர் பதிவுகளில் குறித்த முன்னேற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் உள்ளடக்கங்கள் தொடர்பாக அவர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. ஆனால், எதிர்பாராத அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதென கூறியுள்ளார். எனினும் தீர்க்கப்படவேண்டிய பல விடயங்கள் காணப்படுவதாகவும், பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு, ஆப்கானிஸ்தான் அரச தரப்பை சந்திப்பதற்காக தான் காபூலை நோக்கிப் பயணிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தலிபான்கள் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து மீளப் பெறப்பட்டால் மாத்திரமே பேச்சுவார்த்தைக்கு உடன்படுவோம் என்றும் தலிபான்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போது அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் சமாதான உடன்படிக்கை எட்டப்படுமென்றும் அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்குலக ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தோற்கடிப்பதோடு, ஆப்கானில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு படைகளை வெளியேற்றும் முனைப்பில் தலிபான்கள் போரிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.