தாக்குதலை மையப்படுத்தி புதிய விளையாட்டு அறிமுகம் !

பிரித்தானியாவின் சலிஸ்பரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நொவிசொக் நச்சுத் திராவக தாக்குதலை மையப்படுத்தி ரஷ்யாவில் விளையாட்டு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தாயத்தை உருட்டி குழுவாக விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு, நொவிசொக் சம்பவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமையும் என விளையாட்டு வடிவமைப்பாளர் கூறுகிறார்.

மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் தமது நாட்டின் மீது சேறு பூசும் வகையில் செயற்பட்டதாகவும் அதனை மையப்படுத்தி இந்த விளையாட்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

சலிஸ்பரி பகுதியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட நொவிசொக் என்ற நச்சுத்திராவக தாக்குதலில், ரஷ்ய முன்னாள் உளவாளியான சேர்ஜி ஸ்க்ரிபல் மற்றும் அவரது மகள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உயிர்த்தப்பியபோதும், அதன் பின்னர் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா உள்ளதென பிரித்தானியா குற்றஞ்சாட்டியுள்ளது. இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, கடந்த 21ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் அவர்களுக்கு தடைவிதித்தது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் இவ்விளையாட்டு அமைக்கப்பட்டுள்ளது.

தமது நாட்டின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இந்த விளையாட்டு நகைச்சுவையாக பதிலளிக்குமென விளையாட்டு வடிவமைப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த விளையாட்டின் 5000 பிரதிகள் இதுவரை விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்குது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.