பத்ம ஶ்ரீ விருது குறித்து கம்பீர்

பத்ம ஶ்ரீ விருது கிடைத்திருப்பதை பெருமையாக கருதுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இதனோடு பொறுப்புகள் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


இரண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தவரான கவுதம் கம்பீருக்கு மத்திய அரசு பத்மஶ்ரீ விருது கொடுத்து கவுரவித்துள்ளது. அவருக்கு பலரும் வாழத்து தெரிவித்து வரும் நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், "இந்த விருது கிடைத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். இதனோடு பொறுப்புகளும் வந்திருப்பதாக உணர்கிறேன். கிரிக்கெட்டர் கவுதம் கம்பீரை மனிதன் கவுதம் கம்பீர் முறியடிக்க வேண்டும். அந்த நாளில் தான் எனக்கு உண்மையான விருது கிடைத்தது போல இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.