பத்ம பூஷன்' நம்பி நாராயணன் ஒரு பெரிய விஞ்ஞானியே இல்லை

மத்திய அரசால் பத்ம பூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேரள இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், பத்ம விருதுக்கு தகுதியற்றவர் என முன்னாள் கேரள காவல்துறை தலைவர் கிரண்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷன் விருது வழங்க உள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து தேசத்துக்கு எதிராக உளவுபார்த்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் ஒருவருக்கு பத்ம விருது வழங்குவதா என கேரள முன்னாள் காவல்துறை தலைவர் சென்குமார் விமர்சித்துள்ளார். "பத்ம விருது கொடுப்பதற்கு இதுதான் அளவுகோலா? அப்படி என்றால் கோவிந்தசாமி, அமீருல் இஸ்லாம் (கொலை குற்றவாளிகள்), மரியம் ரஷீதா (உளவுபார்த்த வழக்கில் சிக்கியவர்) ஆகியோருக்கு பத்ம விருது கொடுக்க வேண்டியதுதானே. இந்த முடிவுக்கு முன் அரசாங்கம் காத்திருந்திருக்க வேண்டும்" என சென்குமார் விமர்சித்தார்.

மேலும் நாராயணன் ஒரு பெரிய விஞ்ஞானி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். "நாராயணன் ஒரு சுமாரான விஞ்ஞானி தான். இஸ்ரோவில் பணியாற்றிய எந்த விஞ்ஞானியை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்" என்றார்.

1994ம் ஆண்டு நாராயணன் மற்றும் மற்றொரு இஸ்ரோ அதிகாரி மீது நாட்டுக்கு எதிராக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. 1995ம் ஆண்டு நாராயணன் எந்த தவறும் செய்யவில்லை என வழக்கிலிருந்து சிபிஐ-யால் விடுவிக்கப்பட்டார். கேரளா போலீசுக்கு எதிராக நாராயணன் தொடுத்த வழக்கில், கடந்த வருடம் உச்சநீதிமன்றம், கேரள அரசு அவருக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

உளவுபார்த்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்ற கமிட்டி தற்போது மீண்டும் விசாரித்து வருவதாக சென்குமார் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.