பிப். 21ல் வெளியாகிறது தேசிய விருது பெற்ற டூலெட் திரைப்படம்

பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் உருவாகி தேசிய விருது வென்ற டூலெட் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் வீடு தேடி அலையும் நடுத்தர குடும்பத்தை பற்றிய கதைக்களத்துடன் உருவான திரைப்படம் டுலெட்.  இதனை கல்லூரி, பரதேசி, தாரதப்பட்டை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் செழியனின் உதவியாளர் சந்தோஷ் நாயகனாக நடிக்க, ஷீலா நாயகியாக நடித்துள்ளார். இவர்களது மகனாக தருண் என்ற சிறுவன் நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படம் என்ற தேசிய விருது பெற்றது. மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 32  விருதுகளை பெற்றுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி முதல் வெளியாகவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.