சலவை பட்டறையில் தீ விபத்து

எடப்பாடி அருகே சலவை பட்டறையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.



சேலம்  மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கா.புதூரைச் சேர்ந்தவர் கார்த்தி (36). இவருக்கு சொந்தமான சலவை பட்டறையில் இன்று பட்டப்பகலில் மின்சார கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில், சலவை பட்டறையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நூல் கட்டுகள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.

மேலும் சலவைப்பட்டறை அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்றும் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.