மூடப்பட்ட விடுதி மீளத் திறப்பு!
முல்லைத்தீவு, மணல்குடியிருப்பில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு அருகில் இயங்கிய மதுபானசாலையுடன் கூடிய விடுதி மக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் இரகசிய அனுமதியின் பெயரில் திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த விடுதி அமைக்கப்பட்டது. அதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அதையடுத்து இந்த விடயம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டது.
2018ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடுதியை உடனடியாக மூடுவது என்று தீர்மானிக்கப் பட்டது. எனினும் கடந்த ஆண்டு இறுதிவரை இயங்கியது.
அது தொடர்பில் மாவட்டச் செயலரிடம் கேட்டபோது, ஆண்டு முழுமைக்கான அனுமதியைப் பெற்று விடுதி இயங்குகின்றது. அதனால் இடையே அதை முடியாதுள்ளது. ஆனால் புதிய ஆண்டுக்கான அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் அந்த விடுதி மூடப்பட்டிருந் தது. கடந்த 3 நாள்களாக அந்த விடுதி இயங்குகின்றது என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விடுதியை மூடுவது என்று தீர்மானிக்கப் பட்டுள்ள நிலையில் அது இயங்குவது எவ்வாறு என்று முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கேட்டபோது-.
அந்த விடுதி திறக்கப்பட்டமைக்கும் எமக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அந்த விடுதிக்கான அனுமதி சுற்றுலா அதிகார சபையின் நடைமுறைக்கமைய வழங்கப்பட்டுள்ளதால், அவர்களின் ஒத்துழைப்புடன் விடுதி மீண்டும் இயங்குிகின்றது. அதற்கு பிரதேச செயலகமோ, மாவட்டச் செயலகமோ எந்த ஒப்புதலும் வழங்கவில்லை.- என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த விடுதி அமைக்கப்பட்டது. அதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அதையடுத்து இந்த விடயம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டது.
2018ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடுதியை உடனடியாக மூடுவது என்று தீர்மானிக்கப் பட்டது. எனினும் கடந்த ஆண்டு இறுதிவரை இயங்கியது.
அது தொடர்பில் மாவட்டச் செயலரிடம் கேட்டபோது, ஆண்டு முழுமைக்கான அனுமதியைப் பெற்று விடுதி இயங்குகின்றது. அதனால் இடையே அதை முடியாதுள்ளது. ஆனால் புதிய ஆண்டுக்கான அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் அந்த விடுதி மூடப்பட்டிருந் தது. கடந்த 3 நாள்களாக அந்த விடுதி இயங்குகின்றது என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விடுதியை மூடுவது என்று தீர்மானிக்கப் பட்டுள்ள நிலையில் அது இயங்குவது எவ்வாறு என்று முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கேட்டபோது-.
அந்த விடுதி திறக்கப்பட்டமைக்கும் எமக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அந்த விடுதிக்கான அனுமதி சுற்றுலா அதிகார சபையின் நடைமுறைக்கமைய வழங்கப்பட்டுள்ளதால், அவர்களின் ஒத்துழைப்புடன் விடுதி மீண்டும் இயங்குிகின்றது. அதற்கு பிரதேச செயலகமோ, மாவட்டச் செயலகமோ எந்த ஒப்புதலும் வழங்கவில்லை.- என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை