தமிழ் அரசுக் கட்சி மாநாடு – மார்ச்சில் யாழ்ப்பாணத்தில் நடக்கும்!!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற மையச் செயற்குழுக் கூட்டத்திலேயே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் திகதி முல்லைத்தீவில் தமிழ் அரசுக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, கட்சியின் மாநாட்டை 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம், செப்ரெம்பர் 1ஆம், 2ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. பின்னர் மாநாடு நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டத்தில் கட்சி
மாநாட்டை மார்ச் மாதம் நடத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்
மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம். நாளாந்த அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும். சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்கங்களும் தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் ஓர் இணக்கத்துக்கு வரவேண்டும்’ என்று தமிழ் அரசுக் கட்சியினர் தமது தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
சிவமோகன், குகதாஸ்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும், குகதாஸும், சிறப்பு விருந்தினர்கள் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாகக் கலந்து கொள்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து இருவரையும் மையச் செயற்குழுவில் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கட்சி தாவியோர்
தமிழ் அரசுக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த மன்னாரைச் சேர்ந்த சிவகரன், மாகாணசபை முன்னாள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோரை கட்சியிலிருந்து முழுமையாக நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் கட்சிக் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்ட உறுப்பினர்களை இடைநிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வலி.தெற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தி.பிரகாஸை கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவர் தன் மீதான தவறை ஏற்றுக் கொண்டமையால் கட்சி உறுப்பினராகத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்சி ஆரம்பித்த முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் க.அருந்தவபாலன் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அவர்கள் புதிய கட்சி ஆரம்பித்துள்ளமையால் கட்சியிலிருந்து நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புளொட் அமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தமையால், தமிழ் அரசுக் கட்சியும், புளொட் அமைப்பும் இணைந்து அவர் தொடர்பில் ஆரம்ப விசாரணை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டம் தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்குக்கான அபிவிருத்திச் செயலணியில் கிழக்கு இணைப்பாளராக நியமிக்கப்பட்ட குகதாசன், தன்னிச்சையாகவும், சிலரை மாத்திரம் இணைத்து முடிவுகள் எடுக்கின்றார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் நீண்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. நிர்வாகச் செயலரின் தலையீட்டை அடுத்து இந்த விடயம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் திகதி முல்லைத்தீவில் தமிழ் அரசுக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, கட்சியின் மாநாட்டை 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம், செப்ரெம்பர் 1ஆம், 2ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. பின்னர் மாநாடு நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டத்தில் கட்சி
மாநாட்டை மார்ச் மாதம் நடத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்
மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம். நாளாந்த அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும். சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்கங்களும் தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் ஓர் இணக்கத்துக்கு வரவேண்டும்’ என்று தமிழ் அரசுக் கட்சியினர் தமது தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
சிவமோகன், குகதாஸ்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும், குகதாஸும், சிறப்பு விருந்தினர்கள் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாகக் கலந்து கொள்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து இருவரையும் மையச் செயற்குழுவில் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கட்சி தாவியோர்
தமிழ் அரசுக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த மன்னாரைச் சேர்ந்த சிவகரன், மாகாணசபை முன்னாள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோரை கட்சியிலிருந்து முழுமையாக நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் கட்சிக் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்ட உறுப்பினர்களை இடைநிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வலி.தெற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தி.பிரகாஸை கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவர் தன் மீதான தவறை ஏற்றுக் கொண்டமையால் கட்சி உறுப்பினராகத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்சி ஆரம்பித்த முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் க.அருந்தவபாலன் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அவர்கள் புதிய கட்சி ஆரம்பித்துள்ளமையால் கட்சியிலிருந்து நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புளொட் அமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தமையால், தமிழ் அரசுக் கட்சியும், புளொட் அமைப்பும் இணைந்து அவர் தொடர்பில் ஆரம்ப விசாரணை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டம் தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்குக்கான அபிவிருத்திச் செயலணியில் கிழக்கு இணைப்பாளராக நியமிக்கப்பட்ட குகதாசன், தன்னிச்சையாகவும், சிலரை மாத்திரம் இணைத்து முடிவுகள் எடுக்கின்றார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் நீண்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. நிர்வாகச் செயலரின் தலையீட்டை அடுத்து இந்த விடயம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை