பிலிப்பைன்ஸில் இரட்டைக்குண்டு தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு
மேலும் 42 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆராதனை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
ஜோலோ தீவிலுள்ள தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றபோது முதலாவது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டாவது குண்டுவெடிப்பு அருகிலுள்ள வாகன தரிப்பிடமொன்றில் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
முஸ்லிம்களின் தன்னாட்சி பிராந்தியம் தொடர்பாக கடந்த வாரம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இப்பிரதேச மக்கள் எதிராகவே வாக்களித்திருந்தனர். அதன் பின்னணியிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜோலோ தீவானது அபு சையாப் தீவிரவாத குழு உள்ளடங்களாக ஐ.எஸ். தீவிரவாத குழுவின் மையப்பகுதியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை