பிறமொழி கற்றாலே தமிழ் மொழியின் ஆழம் புரியும்!! வடக்கு ஆளுநர்!!
ஒரு மொழியின் ஆழத்தை நாம் அறிய வேண்டுமானால் வேறு ஒரு மொழியைக் கற்கவேண்டும். அப்போதுதான் எமது தாய்மொழியான தமிழின் ஆழத்தை – சிறப்புக்களை – பெருமைகளை அறிந்து கொள்ளமுடியும். யாழ்ப்பாணத்தில் பேசப்படுகின்ற தமிழே தூய தமிழ். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் நியமனங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவா்களே மேற்படி கருத்தினைக்கூறியிருந்தாா். அவா் மேலும் கூறியதாவது....
தமிழ்த் தேசத்தை அழிக்க நினைத்த எதிரிகள், எமது மண்ணை அழிப்பதற்கு முன்னர் எம்மிடமிருந்த அரிய புத்தகங்களை எரித்தார்கள். தமிழ் மொழியையும் எமது கலாசாரத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உள்ளது.
அலுவலகங்களில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி சம உரிமை கொடுங்கள். பெண்கள் பலர் வடக்கில் உயர் அதிகாரிகளாக உள்ளார்கள். பல்கலைக்கழகங்களுக்கு ஆண்களை விட பெண்களே அதிகமாகத் தெரிவு செய்யப்படுகின்றார்கள். அரச உத்தியோகங்களில் கூட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. இதே நிலமை தொடர்ந்தால் ஆண்கள், பெண்களின் காலடியில் இருக்கும் நிலமை கூட வரலாம் -– என்றார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண தலைமைச் செயலர் அ.பத்திநாதன் தெரிவித்ததாவது: வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கின்ற நியமனமாக ஆசிரியர் நியமனத்தை நோக்கக் கூடாது. ஏனைய அரச பணிகளைவிட ஆசிரியப் பணி வித்தியாசமானது. எதிர்காலச் சந்ததியை உருவாக்கும் பணி. ஆசிரியர் துறையில் நியமனம் பெற்றுள்ள நீங்கள் அக்கறையுடன் செயற்படுங்கள். பொறுமையுடனும், கடமையுணர்வுடனும் பணியாற்றுங்கள்.
வடக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி வீதம் குறைந்து செல்கின்றது என்று பலரும் குற்றம் சுமத்துகின்றனர். இவ்வாறானதொரு நிலையிலேயே வடக்கு மாகாண கல்வித் துறைக்குள் நீங்கள் நுழைந்துள்ளீர்கள். கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் தகர்த்து எறியும் வகையில் அர்ப்பணிப்புடன் கடமைகளைச் செய்யுங்கள் -– என்றார்.
கணித, விஞ்ஞான, ஆங்கில பட்டதாரிகள் 160 பேருக்கும், கலைப் பட்டதாரிகள் 89 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
வடக்கு மாகாணத்தில் நியமனங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவா்களே மேற்படி கருத்தினைக்கூறியிருந்தாா். அவா் மேலும் கூறியதாவது....
தமிழ்த் தேசத்தை அழிக்க நினைத்த எதிரிகள், எமது மண்ணை அழிப்பதற்கு முன்னர் எம்மிடமிருந்த அரிய புத்தகங்களை எரித்தார்கள். தமிழ் மொழியையும் எமது கலாசாரத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உள்ளது.
அலுவலகங்களில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி சம உரிமை கொடுங்கள். பெண்கள் பலர் வடக்கில் உயர் அதிகாரிகளாக உள்ளார்கள். பல்கலைக்கழகங்களுக்கு ஆண்களை விட பெண்களே அதிகமாகத் தெரிவு செய்யப்படுகின்றார்கள். அரச உத்தியோகங்களில் கூட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. இதே நிலமை தொடர்ந்தால் ஆண்கள், பெண்களின் காலடியில் இருக்கும் நிலமை கூட வரலாம் -– என்றார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண தலைமைச் செயலர் அ.பத்திநாதன் தெரிவித்ததாவது: வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கின்ற நியமனமாக ஆசிரியர் நியமனத்தை நோக்கக் கூடாது. ஏனைய அரச பணிகளைவிட ஆசிரியப் பணி வித்தியாசமானது. எதிர்காலச் சந்ததியை உருவாக்கும் பணி. ஆசிரியர் துறையில் நியமனம் பெற்றுள்ள நீங்கள் அக்கறையுடன் செயற்படுங்கள். பொறுமையுடனும், கடமையுணர்வுடனும் பணியாற்றுங்கள்.
வடக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி வீதம் குறைந்து செல்கின்றது என்று பலரும் குற்றம் சுமத்துகின்றனர். இவ்வாறானதொரு நிலையிலேயே வடக்கு மாகாண கல்வித் துறைக்குள் நீங்கள் நுழைந்துள்ளீர்கள். கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் தகர்த்து எறியும் வகையில் அர்ப்பணிப்புடன் கடமைகளைச் செய்யுங்கள் -– என்றார்.
கணித, விஞ்ஞான, ஆங்கில பட்டதாரிகள் 160 பேருக்கும், கலைப் பட்டதாரிகள் 89 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை