சேலத்தில் குற்றச்செயலை தடுக்க தனிப்படை போலீஸ்

சேலம் மேட்டூர் அருகேயுள்ள பகுதிகளில் தொடர்ந்து குற்றச்செயல் புரிந்து வந்த 6 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


சேலம் மாவட்டத்தில் அவ்வப்போது நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்கள் சுதந்திரமாக தங்கள் பணிகளில் ஈடுபடவும், மாவட்டத்தின் அனைத்து காவல்  நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் கடந்த 23ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால், உதவி ஆய்வாளர் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர்  கருமலைகூடல் மற்றும் மேட்டூர் பகுதிகளில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அடுத்த குற்ற செயல்களில் ஈடுபட சதித்திட்டம் தீட்டி வந்த 6 பேரை இன்று கைது செய்து  கருமலைகூடல் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். 

மேலும், இந்த  தனிப்படையினர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து, குற்றச்செயல்களில் ஈடுபட சதித்திட்டம் தீட்டுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.