புதிய அர­ச­மைப்பு கூட்­டாட்­சிப் பண்­பு­க­ளு­ட­னேயே வரு­கி­றது!

புதிய அர­ச­மைப்பு கூட்­டாட்­சிப் பண்­பு­க­ளு­டன்­தான் வரு­கின்­றது. சொல்­லா­டல்­களை வைத்து இதில் நாம் சந்­தே­கம் கொள்­ளக் ­கூ­டாது -– முரண்­ப­டக்­கூ­டாது.
இவ்­வாறு வலி­யு­றுத்­தி­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் அர­சி­யல் குழுத் தலை­வ­ரும்திரு­கோ­ண­மலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன்.
இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டம் கொழும்பு, ஆமர் வீதி – பிரைட்­டன் ஹோட்­ட­லில் நேற்று நடை­பெற்­றது. இதில் உரை­யாற்­றும்­போதே இரா.சம்­பந்­தன் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யி­லும், நிபு­ணர்­கள் மற்­றும் சட்ட வல்­லு­நர்­க­ளின் உத்­தேச வரை­வுத் திட்­டத்­தி­லும் கூட்­டாட்­சிப் பண்­பு­கள் காணப்­ப­டு­கின்­றன. அதி­கா­ரங்­கள் பர­வ­லாக்­கப்­பட்­டுள்­ளன. கொழும்பு அரசு திரும்­பப் பெற முடி­யாத வகை­யில் மாகாண சபை­க­ளி­டம் அதி­கா­ரங்­கள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

ஓரி­டத்­தில் அதி­கா­ரங்­கள் குவிந்­தி­ருந்­தால்­தான் அது ஒற்­றை­யாட்சி. அதி­கா­ரங்­கள் பர­வ­லாக்­கப்­பட்­டால் அது கூட்­டாட்சி. எனவே, இதை நாம் உணர்ந்­து­கொள்ள வேண்­டும். சொற்­ப­தங்­களை – சொல்­லா­டல்­க­ளைத் தூக்­கிப் பிடித்­துக்­கொண்டு நாம் முரண்­ப­டக்­கூ­டாது.

வடக்கு, கிழக்கு மக்­க­ளி­டம் உண்மை நிலை­மையை நாம் தெளி­வு­ப­டுத்த வேண்­டும். மக்­க­ளைக் குழப்­பும் விதத்­தில் எவ­ரும் கருத்­துக்­களை வெளி­யி­டக்­கூ­டாது. தெற்­கில் உள்ள மக்­களை சமா­ளிப்­ப­தற்­காக அரச தரப்­பி­னர் சொல்­லா­டல்­க­ளைத் தங்­க­ளுக்கு ஏற்ற வகை­யில் பயன்­ப­டுத்­து­வார்­கள். இதை நாம் தூக்­கிப் பிடிக்­கக்­கூ­டாது. புதிய அர­ச­மைப்பு நிறை­வேற அனைத்து வழி­க­ளி­லும் நாம் ஒத்­து­ழைக்க வேண்­டும்.

ஒக்­ரோ­பர் 26ஆம் திகதி ஏற்­பட்ட அர­சி­யல் சூழ்ச்­சியை ஜன­நா­யக வழி­யில் முறி­ய­டிக்க நாம் பெரி­தும் உத­வி­னோம். பன்­னாட்­டுச் சமூ­கம் எமது பக்­கம் நிற்­கின்­றது. இலங்கை மீதான பன்­னாட்டு அழுத்­தங்­க­ளும் எமக்­குச் சார்­பாக உள்­ளன. இந்­தச் சந்­தர்ப்­பத்தை நாம் சரி­யான முறை­யில் பயன்­ப­டுத்த வேண்­டும். தமி­ழர்­க­ளா­கிய எமது இலக்கை அடைய ஓர­ணி­யில் பய­ணிக்க வேண்­டும். எமக்­குள் வேற்­று­மை­கள் இருக்­கக்­கூ­டாது.

சில தினங்­க­ளுக்கு முன் இலங்­கைக்­கான ஜப்­பான் தூது­வர் என்­னைச் சந்­தித்­துச் கலந்­து­ரை­யா­டி­னார். இதன்­போது இலங்­கை­யின் ஏற்­பட்ட அர­சி­யல் சூழ்ச்சி முறி­ய­டிக்­கப்­பட்ட விட­யம் தொடர்­பி­லும் பேசி­னோம். ஒரு கட்­டத்­தில் அவர், ‘தமிழ் மக்­கள் தொடர்ந்­தும் உங்­களை (தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை) ஆத­ரிப்­பார்­களா? இதில் நீங்­கள் நம்­பிக்கை கொண்­டுள்­ளீர்­களா?’ என்று வின­வி­னார். நான் ‘ஆம்’ என்று பதி­ல­ளித்­தேன். எமது மக்­க­ளின் நிலைப்­பாட்டை அவ­ரும் எடுத்­து­ரைத்­தேன்.

எமது மக்­க­ளின் மனதை வெல்­லும் வகை­யில் நாம் செயற்­பட வேண்­டும். அவர்­கள் எம் மீது நம்­பிக்கை வைத்­துள்­ளார்­கள். எனி­னும், அந்த நம்­பிக்­கையை நாம் செயல் வடி­வில் உறு­திப்­ப­டுத்­திக் காட்ட வேண்­டும். நாடா­ளு­மன்­றத் தேர்­தலோ அல்­லது மாகாண சபைத் தேர்­தலோ நடை­பெற்­றால் அதில் எமது பிர­தி­நி­தி­க­ளின் எண்­ணிக்­கையை மேலும் அதி­க­ரிக்­கச் செய்ய வேண்­டும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை நாம் மேலும் பலப்­ப­டுத்த வேண்­டும்.

கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் 16 உறுப்­பி­னர்­கள் எமது கட்­சி­யில் தெரி­வா­னார்­கள். அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அந்த எண்­ணிக்­கையை நாம் அதி­க­ரிக்­கச் செய்ய வேண்­டும் – என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.