கடலோர காவல் படை நடத்திய விளையாட்டு விழா!

43வது கடலோர காவல் படை தினத்தை முன்னிட்டு, இந்திய கடலோர காவல் படை, சென்னை வி.ஐ.டி கல்லூரியில், விளையாட்டு மற்றும் உடற்தகுதி நிகழ்ச்சிகளை நடத்தியது.


வரும் பிப்ரவரி 1ம் தேதி 43வது இந்திய கடலோர காவல் படை தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, விளையாட்டு மட்டும் உடற்தகுதி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சென்னை வி.ஐ.டி கல்லூரியில், மிக விமர்சியாக விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

விளையாட்டு, உடற்தகுதி, அட்வென்ச்சர் என மூன்று விதமான போட்டிகளும், சவால்களும் வைக்கப்பட்டன. நாள் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டனர். கார்ப்பரேட், கல்லூரி மாணவர், மாணவிகள், காவல் படை, தனி நபர் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. விஐடி கல்லூரி நிர்வாகமும் மாணவர்களும், கடலோர காவல் படையுடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். காவல்துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திர பாபு இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.