பிரதமர் அலுவலகம் மீது மக்களுக்கு நம்பிக்கை: ஆய்வறிக்கையில் தகவல்

உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளை விட, பிரதமர் அலுவலகத்தின் செயல்பாடுகளில் மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


நாட்டு மக்களின் நம்பிக்கை குறித்து, பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகரை சேர்ந்த குளாேபல் மார்க்கெட் ரிசர்ச் பர்ம், நாடு முழுவதும் உள்ள, 23 மாநிலங்களில், 320 லோக்சபா தொகுதிகளில் உள்ள, 35 ஆயிரம் பேரிடம் சில கேள்விகளை முன் வைத்து, ஆய்வு நடத்தியது.
அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில், தன் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:
‛‛ நாட்டின் மிக உயர்ந்து நீதி வழங்கும் அமைப்பான உச்ச நீதிமன்றத்தை விட,பிரதமர் அலுவலகத்தை இந்திய மக்கள் பெரிதும் நம்புகின்றனர். அந்த அலுவலகத்தின் செயல்பாடுகள் மீது, 74.4 சதவீதம் பேர் நம்பிக்கை வைத்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளில், 72.6 சதவீதம் பேரும், பார்லிமென்ட் செயல்பாடுகளை, 71.7 சதவீதம் பேரும் நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரசின் செயல்பாடுகளை, 53 சதவீதம் பேர் மட்டுமே நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியை, 64 சதவீதம் பேர் நம்புவதாக தெரிவித்துள்ள நிலையில், காங்., தலைவர் ராகுலை, 44 சதவீதம் பேர் மட்டுமே நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். நகரங்கள், கிராமங்கள் என பல்வேறு இடங்களில் வசிக்கும், பலதரப்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில், இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.