ஐ.நா.வின் விசாரணை ஆரம்பம் . கஷோக்கி படுகொலை விவகாரம்!!

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி படுகொலை விவகாரம் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு வார பணி துருக்கியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மரண தண்டனைக்கான ஐ.நா. சிறப்பு தூதுவர் எக்னஸ் களமார்ட், துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சரை இன்று (திங்கட்கிழமை) சந்தித்துள்ளார்.

துருக்கி அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐ.நா. சிறப்பு தூதுவரின் இந்த இஸ்தான்புல் விஜயம் அமைந்துள்ளது.

துருக்கி மற்றும் சவுதி அதிகாரிகளால் இவ்வழக்கு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் இப்படுகொலை மீது அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்களின் பொறுப்பு குறித்தும் மூன்று பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி படுகொலை செய்யப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து ஜமால் கஷோக்கி கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலைக்கு சவுதி இளவரசரின் அதிகாரிகளே காரணம் என தெரிவித்து சவுதி மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இப்படுகொலைக்கும் சவுதி இளவரசருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து ரியாத் இக்குற்றச்சாட்டை தொடர்ச்சியாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.