எச்சரிக்கை! பிரேசிலில் மற்றுமொரு பேரனர்த்த அபாயம்!!
பிரேசிலில் உள்ள மற்றுமொரு சுரங்க அணை உடையும் அபாயத்தில் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அணையை அண்மித்த பகுதியிலுள்ள சுமார் 24 000 பேரை அப்பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு மீட்பு பணியாளர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளனர்.
அணை உடையும் பட்சத்தில் அதனால் ஏற்படக்கூடிய நிலைமை மிகவும் ஆபத்தாக அமையும் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதன் உண்மையான அபாய நிலை குறித்து கருத்து தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், ஏற்கனவே இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்கிழக்கு பிரேசிலில் கடந்த வெள்ளிக்கிழமை அணையொன்று உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இந்நிலையில், அணையை அண்மித்த பகுதியிலுள்ள சுமார் 24 000 பேரை அப்பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு மீட்பு பணியாளர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளனர்.
அணை உடையும் பட்சத்தில் அதனால் ஏற்படக்கூடிய நிலைமை மிகவும் ஆபத்தாக அமையும் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதன் உண்மையான அபாய நிலை குறித்து கருத்து தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், ஏற்கனவே இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்கிழக்கு பிரேசிலில் கடந்த வெள்ளிக்கிழமை அணையொன்று உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை