டெக்சாஸ் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்!!

டெக்சாஸின் ஹியுஸ்டன் நகரில் போதைப்பொருள் தொடர்பான தேடுதல் விசாரணைகளில் ஈடுபட்டிருந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளனர்.


இதேவேளை, பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இரு சந்தேகநபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸாரின் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்கிழக்கு ஹியுஸ்டன் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் தேடுதல் நடவடிக்கைக்காக பொலிஸார் நுழைய முற்பட்ட வேளையிலேயே இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

பின்னர் பொலிஸார் வீட்டிற்குள் ரொபோக்களை அனுப்பு சோதித்துள்ளனர். அதன்மூலம் கிடைத்த ஒளிப்படங்களின் மூலம் இரு சந்தேகநபர்கள் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

எனினும், சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.